மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதி நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு

General Crishantha de Silvaசிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, நான்கு நட்சத்திர ஜெனரலாக, சிறிலங்கா அதிபர் மைதை்திரிபால சிறிசேனவினால்  பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இன்று தொடக்கம் நடைமுறைக்கும் வரும் வகையில், இந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் 21 ஆவது தளபதியாக, 2015 பெப்ரவரி 22ஆம் நாள தொடக்கம் பதவியில் இருந்து வருகிறார்.

அதேவேளை,  கூட்டுப் படைகளின் தளபதியாகவும், ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய இராணுவத் தளபதி பற்றிய அறிவிப்பும் நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *