கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள்
பிரெஞ்சு கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
மிஸ்ரால் (‘Mistral’) எனப்படும் பாரிய தரையிறக்க மற்றும் உலங்குவானூர்தி தாங்கி கப்பலும், கோர்பெட் (Courbet) என்ற போர்க்கப்பலுமே இன்று கொழும்பு வந்துள்ளன.
மிஸ்ரால் கப்பலில் 56 அதிகாரிகள் உள்ளிட்ட 431 கடற்படையினரும், போர்பெட் கப்பலில் 18 அதிகாரிகள் உள்ளிட்ட 157 கடற்படையினரும் உள்ளனர்.
வரும் ஜூன் 26ஆம் நாள் வரை பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் இரண்டும், கொழும்பில் தரித்திருக்கும். இதன் போது, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பிரெஞ்சுக் கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர்.