மேலும்

அவசர கடிதம் அனுப்பிய விக்கியை, ஆறுதலாக பேச்சுக்கு அழைக்கிறார் மைத்திரி

MS_CMவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, வடக்கு மாகாணத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

வரும் மே 17 ஆம் நாள்  பேச்சுக்களை நடத்த வருமாறு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கில் காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளும், காணிகளை படையினரிடம் இழந்தவர்களும் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு விரைவாக தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பாகவே அடுத்தமாதம் பேச்சு நடத்த சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களும், காணிகளை இழந்தவர்களும் இரண்டு மாதங்களுக்கு மேலாக வடக்கில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *