மேலும்

கணினித் தொகுதி செயலிழந்ததால், முடங்கிப் போன கட்டுநாயக்க விமான நிலையம்

airportகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், விமான நிலையச் செயற்பாடுகள் நேற்று இரண்டரை மணிநேரம் முடங்கிப் போயின.

நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலைய கணினி கட்டமைப்பு தொகுதி திடீரெனச் செயலிழந்தது.

இதனால், குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் வெளிச்செல்ல முடியாமலும், விமானங்களுக்கு அனுமதிக்கப்படாமலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது.

இரண்டரை மணிநேரத்துக்குப் பின்னர், மாலை 5.45 மணியளவில் கணினி கட்டமைப்பு மீண்டும் செயற்படத் தொடங்கிய பின்னரே, நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்கியது.

இதனால் விமானங்களின் புறப்படும் நேரத்திலும் தாமதம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *