மேலும்

ஆனைக்கோட்டையில் மர்மநபர்களின் வாள்வெட்டுக்கு 3 இளைஞர்கள் காயம்

bike-damageபல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை  செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படட அதேவேளை, நேற்றிரவு இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் வந்தவர்கள் மூன்று இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில். ஆனைக்கோட்டை ஆலடிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உந்துருளிகளில் சென்ற மூன்று இளைஞர்களை, இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் வந்த சிலர், மறித்து, முழந்தாளிட வைத்து தாக்கியுள்ளனர்.

அப்போது மற்றொரு உந்துருளி வரவே, அவர்களை அதனைத் துரத்திச் சென்ற போது, முழந்தாளிடப்பட்டு தாக்கப்பட்ட இளைஞர்கள் மூவரும் காயங்களுடன் தப்பிச் சென்றனர்.

அவர்கள் தப்பிச் சென்றதையடுத்து, இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உந்துருளிகளை வாளால் வெட்டி சேதப்படுத்தி விட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *