மேலும்

சிறிலங்காவுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவு வழங்குவதாக ரஷ்யா உறுதி

maithri-putinசிறிலங்காவுக்கு எல்லா விதத்திலும் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ்-பிம்ரெக்ஸ் மாநாடுகளின் போது, நேற்றுமாலை இரண்டு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசிய போதே ரஷ்ய அதிபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, ஐ,நா.மனித மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதற்கு ரஷ்ய அதிபர் புடினுக்கு சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *