மேலும்

மாதம்: September 2016

எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கம் அஞ்சவில்லை – ருவான் விஜேவர்த்தன

வடக்கில் இருந்து படைகளை விலக்குமாறு சிலர் பேரணிகளை நடத்தினாலும், வடக்கில் இருந்து சிறிலங்கா படை முகாம்களை அகற்ற அரசாங்கம் ஒருபோதும் இணங்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

புலிகள் மீதான தடை குறித்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பு – கவலையில் சிறிலங்கா

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மாலிக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் தொகை கால்வாசியாக குறைப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஓமல்பே சோபித தேரர்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, ஓமல்பே சோபித தேரர் நேற்று அறிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.

மத்தல விமான நிலையத்தில் விமானக்கடத்தல் முறியடிப்பு, பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை

நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக, சிறிலங்கா இராணுவக் கொமாண்டோக்கள், மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தா அறிவிப்பு

அடுத்து நடக்கவுள்ள எந்தவொரு அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மான நடைமுறைப்படுத்தல் – மங்களவுடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன்  பிரித்தானியா நாடாளுமன்றத்தின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அலோக் சர்மா, பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலக சமூகத்துக்கு அம்பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் வாக்குறுதிகளை மைத்திரியிடம் நினைவுபடுத்தினார் ஜோன் கெரி

சிறிலங்கா அரசாங்கம் தனது அனைத்துலக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.