மேலும்

மாதம்: September 2016

பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நடந்த தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள்

இந்திய-சிறிலங்கா அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றன.

எழுக தமிழுக்கு அரச சொத்துக்கள் – விக்கியைக் கைது செய்யக்கோரும் கம்மன்பில

பொதுச் சொத்துக்கள் சட்டத்தை மீறி, எழுக தமிழ் நிகழ்வை நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோருகிறார் சரத் பொன்சேகா

இராணுவத் தளபதியாக இருந்த தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ஆறாவது நாளாகத் தொடர்ந்தது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழ் அரசியல் கைதிகள், நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

அச்சுவேலி கொலைகள் – லெப்.கேணல் உள்ளிட்ட 5 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்

அச்சுவேலியில் 1998ஆம் ஆண்டு இரண்டு பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில், அச்சுவேலி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த லெப்.கேணல் தர அதிகாரி உள்ளிட்ட 5 சிறிலங்கா இராணுவத்தினரை,  விளக்கமறியலில் வைக்க யாழ்.மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை – மகிந்த ராஜபக்ச

எகலியகொடவில் வரும் ஒக்ரோபர் 8ஆம் நாள் நடக்கவுள்ள கூட்டு எதிரணியின் பேரணியில் புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக திணைக்கள மூத்த ஆய்வு ஆலோசகர் கலாநிதி சாய் ஷாங்ஜின் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.

எழுக தமிழ் பேரணியால் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சி.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பாக தேசிய கொள்கை

இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் இயல்பு வாழ்விற்குத் திரும்புவதற்கு அவசியமான, இராணுவம் மற்றும் காவற்துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தேசியக் கொள்கை ஒன்றை வரைந்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் மரணப் பொறி – என்கிறார் மகிந்த

அரசியலமைப்பைத் திருத்தும் தற்போதைய நகர்வுகள் ஒரு  மரணப் பொறி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.