மேலும்

புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை – மகிந்த ராஜபக்ச

mahindaஎகலியகொடவில் வரும் ஒக்ரோபர் 8ஆம் நாள் நடக்கவுள்ள கூட்டு எதிரணியின் பேரணியில் புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிலிமத்தலாவ உரபொல விகாரையில் நேற்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கட்சியை உருவாக்குவது குறித்து மக்களே முடிவு செய்ய வேண்டும்.

புதிய கட்சியை உருவாக்குவதற்காக வரும் ஒக்ரோபர் 8ஆம் நாள் கூட்டு எதிரணி பேரணியை நடத்தவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

எகலியகொட கூட்டத்தில், புதிய கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *