கொழும்புத் துறைமுகத்தில் பாரிய தீவிபத்து
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இன்று பிற்பகல் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இறப்பர் களஞ்சியத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்தினால், எழுந்துள்ள பாரிய புகை மூட்டத்தை தொலைவில் இருந்தே அவதானிக்க முடிகிறது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.