மேலும்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கே முக்கியத்துவம்- சிறிலங்கா அதிபர்

maithri-unகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் போது, சுற்றுச்சூழலுக்கே அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் முடிவுகள் எடுக்கப்படும் போது, சாத்தியவள அறிக்கைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு, முப்படைகளினதும் உதவியைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலில் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *