இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு
வடக்கிற்கான தொடருந்துப் பாதை புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.
வடக்கிற்கான தொடருந்துப் பாதை புனரமைக்கப்பட்டதில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே, அந்தப் பணியை மேற்கொண்ட இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவுகளை இடை நிறுத்தியிருப்பதாக சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வடக்கிற்கான தொடருந்துப் பாதை அமைப்பில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் முடியும் வரை, இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.