மேலும்

யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றில் மனு

jaffna-dsயாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடும்படி கோரி, எமது சிறிலங்கா சுதந்திர முன்னணி என்ற அரசியல் கட்சியின் செயலர் சாகர காரியவசம், மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமது கட்சி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாகவும், அந்த மனுவை யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமது வேட்புமனு தவறான முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் எமது சிறிலங்கா சுதந்திர முன்னணியின் செயலர் மேல் முறையீட்டு நீதிமன்றிடம் கோரியுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக இரண்டு சுயேச்சைக் குழுக்கள் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *