ஓகஸ்ட் 5ஆம், 6ஆம் நாள்களில் அஞ்சல் வாக்களிப்பு
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம், 6ஆம். நாள்களில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
அதேவேளை, பாடசாலை ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் நாள் அஞ்சல்மூலம் வாக்களிப்பை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரச பணியாளர்கள் மற்றும் முப்படையினர், காவல்துறையினர் அஞ்சல் மூலம் வாக்க்களிக்க முடியும்.
அதற்கான விண்ணப்பங்களை தேர்தல் திணைக்களம் ஏற்கனவே கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.