புதிய கூட்டணியிலேயே போட்டியிடுவார் மகிந்த – பசில் ராஜபக்ச தெரிவிப்பு
புதிய கூட்டணி ஒன்றிலேயே சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு புதைகுழி தோண்டியவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதை விட, தனது விசுவாசிகளை மட்டும் கொண்ட, கூட்டணியில் போட்டியிடுவது நல்லது.
ஆனாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு மகிந்த ராஜபக்ச வெளியேறமாட்டார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் கூட ஒருமுறை, வேறு சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார்.” என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.