மேலும்

ஐதேகவுடன் இணைந்து போட்டியிடுகிறது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

rauff-hakeemசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக, கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐதேக தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னரே, அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

விரைவில் ஐதேகவுடன் தமது கட்சி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே தனித்துப் போட்டியிடவே திட்டமிட்டிருந்த்து என்றும், ஆனால் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடுவது நல்லது என்று பின்னர் கட்சி தீர்மானித்துள்ளதாகவும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *