முடிவுக்கு வந்தது மகிந்த – மைத்திரி பேச்சு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சுக்கள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 1.45 மணியளவில், நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் உள்ள சிறிலங்கா அதிபரின் செயலகத்தில், இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகியிருந்தன.
சுமார் 2.45 மணியளவில், அதிபர் மைத்திரிபால சிறிசேன, பேச்சுக்களை முடித்துக் கொண்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் 10 நிமிடம் கழித்து மகிந்த ராஜபக்ச அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இருவரும் ஊடகவியலாளர்களிடம் எதுவும் பேசவில்லை.
இருவருக்கும் இடையிலான பேச்சுக்கள் சுமார் 1 மணிநேரம் வரை இடம்பெற்ற போதும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் மற்றும், எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.