மேலும்

திருகோணமலைத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்

??????????பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

சுல்பிகார் என்ற இந்தப் போர்க்கப்பல், 123 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 303 பாகிஸ்தான் கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

நேற்று பாகிஸ்தான் போர்க்கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் அதற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

pak-warship (2)

கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்ற பாகிஸ்தான் போர்க்கப்பலின் தளபதி கப்டன் அமீர் மொகமட், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரோகண பெரேராவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *