மேலும்

கொழும்புக்கு படையெடுக்கவுள்ள அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்டங்கள்

nisha-desai-biswalஅடுத்த இரண்டு வாரங்களுக்குள், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த விருப்பம் கொண்டுள்ளன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை நிரவும் நோக்கில், அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்ட அரச பிரதிநிதிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு கொழும்பு வரவுள்ளோரில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலும் அடங்குவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *