திருப்பி அழைக்கப்படும் 27 தூதுவர்களில் முன்னாள் படைத்தளபதிகளும் நால்வர்
அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட, 27 பேரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளவர்களில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் உதயங்க வீரதுங்கவும், முன்னாள் படை அதிகாரிகளான நால்வரும் உள்ளடங்கியுள்ளனர்.
இதன்படி, அவுஸ்ரேலியடாவுக்கான தூதுவரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்க, ஜப்பானுக்கான தூதுவரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, பாகிஸ்தானுக்கான தூதுவரான முன்னாள் விமானப்படைத் தளபதி எயர்மார்ஷல் டொனால்ட் பெரேரா, தாய்லாந்துக்கான தூதுவரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட ஆகியோரும் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான பாலித கொஹன்னவும் கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அண்மையில் இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் சுதர்சன் செனிவிரத்னவும் விரைவில் கொழும்புக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளார்.
எனினும் அவர், 27 பேர் கொண்ட முதல் பட்டியலில் இடம்பெறவில்லை.
அடுத்த மாதம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லிக்குப் யணம் மேற்கொள்ளும் வரையில், அவர் அங்கு தூதுவராகப் பணியாற்றுவார்.