மேலும்

புதுடெல்லியில் மங்கள – சுஸ்மா சந்திப்பு

mangala-sushmaசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் இன்று மதியம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லியில் இன்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பில், முக்கியமான இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், சிறிலங்கா மற்றும் மாலைதீவு விவகாரங்களுக்கான மேலதிகச் செயலர் சுசித்ரா துரை, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன், சிறிலங்காவுக்கான தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

mangala-sushma

mangala-india

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் சுதர்சன் செனிவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *