மேலும்

கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த

pope-arraival (1)கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

பாப்பரசரை ஏற்றிய இத்தாலி விமானம் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து.

இதையடுத்து, காலை சுமார் 9.06 மணியளவில் பாப்பரசர் விமானத்தில் இருந்து கீழ் இறங்கி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.

அவரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,அமைச்சர்கள், அதிகாரிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும், கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து நின்று  வரவேற்பு அளித்ததுடன், சிங்கள கலாசார மரபுகளின் படி வரவேற்பும் அளிக்கப்பபட்டது.

pope-arraival (2)

pope-arraival (3)

pope-arraival (5)

pope-arraival (6)

இந்த வரவேற்பு நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.

அவருக்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

முன்னதாக, கத்தோலிக்கத் திருச்சபை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும், இரண்டு பேரும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று கோரியிருந்தது.

அதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *