மேலும்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் மைத்திரி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

maithriசிறிலங்காவின் புதிய அதிபராக, புதிய ஜனநாயக முன்னணியின் சின்னத்தின் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர்.

சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மைத்திரிபால சிறிசேன நேற்றைய தேர்தலில் 6,217,162 வாக்குகளைப் பெற்று (51.28%) தெரிவாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச, 5,768,090 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார். அவர், 47.58% வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகிந்த ராஜபக்சவை விட 449,072 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்து “அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் மைத்திரி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு”

Leave a Reply to Nanbendaaநண்பேன்டா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *