மேலும்

அதிகாலையில் அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு

armyசிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார் 800 வரையான காவல்துறையினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத்  தொடங்கிய பின்னர், பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கொழும்பு நகரின் வேறு சில பகுதிகளிலும், சிறிலங்கா படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *