குருநாகல மாவட்டத்தில் 98 வீத அஞ்சல் வாக்களிப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பில், குருநாகல மாவட்டத்தில் அதிகபட்சமாக, 98 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிதிசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகல மாவட்டத்தில், 66,934 அரசாங்கப் பணியாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இவர்களில், 66,300 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.
இவ்வாறு அதிகபட்சமானோர் வாக்களித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை எனவும், ஏனைய தேர்தல்களை விடவும் அதிபர் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் அதிகமாக இருப்பது வழக்கமே என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.