எதிரணி வெற்றி பெற்றால் சிறிலங்காவுக்கு ஆபத்து – அலறுகிறார் பீரிஸ்
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கூட்டு எதிரணியின் தேவை மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாகவே உள்ளது.
எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மத்தியில் தெளிவான கொள்கை வேறுபாடுகள் உள்ளன.
இதனால், இன அடிப்படையில் நாடு பிளவுபடும் ஆபத்து உள்ளது.
இது சிறிலங்காவில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.