மேலும்

மைத்திரி மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல்

maithripalaபெல்மடுல்லவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேன மீது கற்கள் வீசப்பட்ட போதும், காயங்களேதுமின்றித் தப்பினார்.

தாம் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி, கூட்டத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டதாகவும், உடனடியாக தன்னைச் சூழ்ந்து கொண்ட பாதுகாவலர்கள், காப்பாற்றியதாகவும், மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாம் காயமடையாத போதிலும், மேடைக்கு அருகாக அமர்ந்திருந்த சிலர் காயமடைந்ததாகவும், அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த குறைந்தது 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *