மேலும்

Archives

இராட்சத விமானத்தில் 50 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் வந்தன

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.

25 மெட்ரிக் தொன் உதவிப்பொருட்களுடன் கொழும்பு வந்தது இந்தியப் போர்க்கப்பல்

சிறிலங்காவில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த அவசர நிவாரண உதவிப்பொருட்களை ஏற்றிய ஐஎன்எஸ் சுனைனா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

மீட்புக் குழுக்களையும் கொழும்புக்கு அனுப்பியது இந்தியா

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

வெள்ளம், நிலச்சரிவினால் நான்கு இலட்சம் பேர் பரிதவிப்பு

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிலச்சரிவுகளில் சிக்கிய 134 பேர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவிகளை வழங்குவது குறித்து ஆராய அமெரிக்க உயர் அதிகாரி கொழும்பு வருகை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், வெளிநாட்டு உதவிகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர், ஹரி சாஸ்திரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்தது கிளிநொச்சியின் மழைவீழ்ச்சி

கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை பதிவாகிய, மழை வீழ்ச்சி, சிறிலங்காவில் பெய்த அதிகபட்ச மழைவீழ்ச்சிகளில் ஒன்று என, சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெருக்கெடுத்துப் பாயும் களனி கங்கை – வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு நகரப்பகுதிகள் (படங்கள்)

சிறிலங்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், களனி கங்கையில் நீர்மட்டம் 7 மீற்றர் வரை அதிகரித்து, கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளையும் நீரில் மூழ்கடித்துள்ளது.

கேகாலை நிலச்சரிவுகளில் 150 பேருக்கு மேல் பலி (படங்கள்)

கேகாலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலையும், நேற்றுக் காலையும் ஏற்பட்ட இரண்டு, பாரிய நிலச்சரிவுகளில், சிக்கி 150 பேருக்கு மேல் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழத்தில் இடம்பெற்றது.

கேகாலை நிலச்சரிவில் 16 சடலங்கள் மீட்பு – 200 குடும்பங்கள் மாயம்? (படங்கள்)

கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், புதைந்து போன மூன்று கிராமங்களில் இருந்து, 13 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.