மேலும்

Archives

வீதித்தடுப்பை உடைத்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகாயம்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நடத்தப்பட்ட கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, தடுப்புகளை உடைத்துச் செல்ல முயன்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

பிரித்தானிய கருத்து வாக்கெடுப்பு – ஆரம்பக்கட்ட முடிவுகளில் கடும் போட்டி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா அல்லது அதனை விட்டு பிரிந்து செல்வதா என்பது குறித்து பிரித்தானிய மக்கள் மத்தியில் நேற்று நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பின் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது.

நோர்வே பிரதமருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

மரணதண்டனைக்கு எதிரான ஆறாவது உலக மாநாட்டில், பங்கேற்பதற்காக ஒஸ்லோ சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நோர்வே பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அகதிகள் படகைத் திருத்த வாய்ப்பில்லை – மாற்றுவழியை நாடும் இந்தோனேசியா

இந்தோனேசியாவில் தங்கியுள்ள 44 இலங்கை தமிழ் அகதிகளுக்கும், தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு,  சிறிலங்கா மற்றும், இந்தியத் தூதரகங்களிடம் இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களை ‘நோட்டம்’ விட்டார் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், தூதரக அதிகாரிகள் குழுவொன்று, இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை சென்று, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது.

அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

இறுதிப்போரில் வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் – ஒளிப்படங்களை வெளியிட்டது பிரித்தானிய ஊடகம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படைகளால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கிடைத்திருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் அவுஸ்ரேலியப் போர்க்கப்பல்

அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் என்ற ஏவுகணைப் போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்காவுக்கு 16 திருவள்ளுவர் சிலைகள் – சென்னையில் அன்பளிப்பு

சிறிலங்காவில் உள்ள 16 கல்வி நிறுவனங்களில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இலங்கை அகதிகளை கடலில் தள்ளிவிடும் திட்டத்தில் மாற்றமில்லை – இந்தோனேசியா

தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.