மேலும்

Archives

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை

இருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

நேற்றுமாலை கொழும்புத் துறைமுகம் வந்தது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானியப் போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளன. இனாசுமா, சுசுற்சுகி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கொழும்பில் பாகிஸ்தானியர்களின் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவிடம் இந்தியா எதிர்ப்பு

சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் முன்பாக, இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின்  சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில்  பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.

நாளை கொழும்பு வருகிறது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஜேர்மனியின் மியூனிச் நகரில் தீவிரவாதத் தாக்குதல் – 10 பேர் பலி

ஜேர்மனியின் மியூனிச் நகரில் உள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாக ஜேர்மனிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கூட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் சிறிலங்காவுக்கு 108ஆவது இடம்

பூகோள சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் (Environmental performance index) சிறிலங்கா 108ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.