எதிர்கால வெளிவிவகாரக் கொள்கை மீது மகிந்த கவனம் – முன்னாள் தூதுவர்களுடன் ஆலோசனை
எதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு, முன்னைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.