மேலும்

Tag Archives: ஜி.எல்.பீரிஸ்

பொதுஜன முன்னணிக்குத் தலைமையேற்கத் தயார் – மகிந்த அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த போட்டியிட முடியுமா? – உச்சநீதிமன்ற விளக்கத்தை நாடவுள்ளார் பீரிஸ்

2019 அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக, உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பேசலாம் என்று பிரபாகரனை அழைத்தேன், அவர் பதிலளிக்கவில்லை – என்கிறார் மகிந்த

தமிழர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்துவதற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தாம் அழைப்பு விடுத்த போதும், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்கால வெளிவிவகாரக் கொள்கை மீது மகிந்த கவனம் – முன்னாள் தூதுவர்களுடன் ஆலோசனை

எதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு, முன்னைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

மகிந்தவுடன் அமெரிக்கத் தூதுவர் அரசியல் பேசவில்லை – என்கிறார் பீரிஸ்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்காது – பீரிஸ்

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மைத்திரியை கைவிட்டு வந்தால் தான் ‘மொட்டு’ கட்சியில் இடம் – பீரிஸ் நிபந்தனை

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையைக் கைவிட்டு வந்தால் தான், சிறிலங்கா அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும் என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

ரணிலைக் கவிழ்க்க மைத்திரியிடம் உதவி கோருகிறது மகிந்த அணி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் மைத்திரி – பீரிஸ் குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை விசாரிக்காவிடின் வழக்குத் தொடர்வோம் – மகிந்த அணி சூளுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.