மேலும்

Tag Archives: கொழும்பு

கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க இரகசிய முயற்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் சிறிலங்கா பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

கடல்சார் பாதுகாப்புச் சேவையில் சிறிலங்கா கடற்படை – அமைச்சரவை அனுமதி

செங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மொட்டு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கைது

இலஞ்சம் மற்றும் ஓழல்  ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது பயத்தில் விசாரணைக்கு வராமல் பதுங்கினார் ராஜித சேனாரத்ன

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்று விசாரணைக்கு சமூகமளிக்காமல் நழுவியுள்ளார்.

டொக்யார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி  அறிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவில் இலங்கையர்கள் தடுப்பில் இல்லை

டியாகோ கார்சியாவில் இருந்து,  அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என  வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்  இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் விற்கப்படாது – சிறிலங்கா அரசு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ மாத்திரமன்றி, எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை

சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் விசாரிக்கப்படவுள்ள கோத்தாவுக்கு எதிரான வழக்கு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.