மேலும்

Tag Archives: கொழும்பு

மட்டக்களப்புக்கு இரண்டரை அடி நீளமான வாக்குச்சீட்டு

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக சிறிலங்கா அரசாங்க பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்த மைத்திரியின் படம் அகற்றப்பட்டது

கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் தடை – மகிந்தவின் திட்டத்துக்கு ஆப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த மைத்திரியின் சிறப்பு அறிக்கை இன்று வெளிவருமா?

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

நேற்றே சுபநேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டு விட்டாராம் மகிந்த – பசில் தகவல்

அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த குருநாகலவில், சமல் அம்பாந்தோட்டையில் போட்டி?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல மாவட்டத்திலும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் மகிந்த – வேட்புமனுவில் இரகசியமாக கையெழுத்திட்டாரா?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் வந்திருந்ததாகவும், இவர் இரகசியமாக வேட்புமனுவில் கையெழுத்திட வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த, கோத்தா, பொன்சேகாவை கொல்ல முயன்ற குற்றச்சாட்டு- ஒப்புக்கொள்கிறார் லெப்.கேணல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரி குற்றத்தை ஒப்புக்கொள்ள சம்மதித்துள்ளார்.

போட்டியிடாமல் இருப்பது நல்லது – மகிந்தவுக்கு தொலைபேசியில் கூறினார் மைத்திரி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தொலைபேசி மூலம் தெரிவித்ததாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.