மேலும்

Tag Archives: கொழும்பு

கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டாராம் மகிந்த

ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, எந்தவழியிலும் தான் அதற்கு ஒத்துழைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்து – 4 அதிகாரிகள் பலி

மினுவாங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கமாட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கமாட்டார் என்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே பணியாற்றுவார் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தல் விவகாரத்தில் திருப்பம் – ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, மின்னேரியா இராணுவ முகாமில் பணியாற்றிய இரண்டு சிறிலங்கா படையினர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவை இந்தியா தக்கவைத்துக் கொள்ள முடியுமா? – கேணல் ஹரிகரன்

சீனா ஒருபோதும் சிறிலங்காவைக் கைவிடப் போவதில்லை. இந்திய மாக்கடலிலும் தென்னாசியாவிலும் சீனா மிகப் பாரிய மூலோபாய நலனைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் சீனாவின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் சிறிலங்கா மையமாக விளங்குகிறது.

தமிழர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது வட மாகாணம் – சிங்களவர்களை உருவேற்றுகிறார் சங்கநாயக்கர்

யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு – முற்றாக அழிக்கப் போவதாக கோத்தா சூளுரை

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

தொங்கு நாடாளுமன்றம் அமையும் – சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் கணிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐதேகவுக்கும் இடையில் கடும் போட்டியாக அமையும் என்றும், எனினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அளித்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விரைவில் யோசித ராஜபக்சவிடம் விசாரணை

சிறிலங்கா ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.