மேலும்

Tag Archives: குற்றப் புலனாய்வுப் பிரிவு

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய வதை முகாம் – விரிவான அறிக்கை சிஐடி தாக்கல்

திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில்  நிலத்துக்கு அடியில் உள்ள  கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரணில் குறித்து விசாரிக்க சட்டமா அதிபருக்கு தெரியாமல் பிரித்தானியா சென்றது சிஐடி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது.

தேசிய புலனாய்வு பணியகத் தலைவர் போட்டுள்ள ‘குண்டு’

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்று தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

அட்மிரல் கரன்னகொட மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

அட்மிரல் கரன்னகொடவிடம் 8 மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எட்டு மணி நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது சிஐடி விசாரணை

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிஐடிக்கு அறிவித்தார் அட்மிரல்

வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னரே,  தனது அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத சிறிலங்கா – ஜெனிவாவில் இருந்து கடிதம்

சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த சிசிர மென்டிசுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு குறித்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறியது குறித்து, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்வி எழுப்பியுள்ளது.

தயாசிறியிடம் ஐந்தரை மணிநேரம் விசாரணை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.

வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றக் கோரி மூன்று அரசியல் கைதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றில் மனு

அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், தமக்கு எதிரான வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.