சிறிலங்கா இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைக்கவுள்ள இந்தியா
சிறிலங்கா இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து மே 27 ஆம் நாள், 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்காவின் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எல்லா நேரங்களிலும் சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பேரிடர் சவால்களை சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், சீனா முழு ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளது.
டிட்வா பேரிடர் மீள்கட்டமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், சிறிலங்கா சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்தும் என, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும்,வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.