மேலும்

Tag Archives: அட்மிரல் வசந்த கரன்னகொட

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரவுள்ளார் அட்மிரல் கரன்னகொட

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட முன் பிணை கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்மிரல் கரன்னகொடவை கைது செய்ய வேண்டும் – நாடாளுமன்றில் சுமந்திரன்

திருகோணமலைக் கடற்படைத் தள இரகசிய வதைமுகாம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்களை கைது செய்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

திருமலையில் இருப்பது பிரித்தானியர் கால பதுங்குகுழியாம் – கதைவிடுகிறார் அட்மிரல் கரன்னகொட

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட பதுங்குகுழி என்றும் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் படைத் தளபதிகளை சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் படைத்தளபதிகள் நால்வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து ‘காப்பாற்றப்படும்’ சிறிலங்கா கடற்படை அதிகாரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட, சிறிலங்கா கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதது, சட்டத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்கடத்தலுடன் முன்னாள் கடற்படைத் தளபதிக்குத் தொடர்பு – நீதிமன்றில் காவல்துறை தெரிவிப்பு

சிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்களால், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது குறித்து, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவின் இரகசியங்கள் விரைவில் வெளிவரும் – ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில்  பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

போர்நிறுத்த காலத்தில் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ரணில் – அட்மிரல் வசந்த கரன்னகொட

போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்ட போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கண்ணை மூடிக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட.