மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

திடீரென சீனா சென்ற கோத்தா – மகிந்தவும் செல்லத் திட்டம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் சிக்கினார்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அதிபர் ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து ‘காப்பாற்றப்படும்’ சிறிலங்கா கடற்படை அதிகாரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட, சிறிலங்கா கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதது, சட்டத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்குற்ற விசாரணை குறித்து சிறிலங்கா அதிபருடன் கோத்தா பேச்சு

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பல்வேறு தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் குண்டு வீச்சில் இருந்து மகிந்தவைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி – பஸ்நாயக்கவின் பதவி பறிப்பு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்றதையடுத்து, 44 அமைச்சுக்களுக்கான செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா, துமிந்த மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் 3 மணிநேரம் விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினால், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று 3 மணிநேரம் விசாரிக்கப்பட்டார்.

இராணுவ அழுத்தங்களால் பிரகீத் கடத்தல் குறித்த விசாரணைகளை நிறுத்த ரணில் உத்தரவு

சிறிலங்கா இராணுவத்தின் அழுத்தங்களால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைக் களத்தில் 50 முன்னாள் புலிகள்?

எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில், 50இற்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடத்தப்பட்டவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் – காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி.