மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் – அவரது பேச்சாளர் கூறுகிறார்

அரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு – முற்றாக அழிக்கப் போவதாக கோத்தா சூளுரை

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

குறுகியகாலப் பிரதமர் பதவியைக் கோருகிறார் மகிந்த – கௌரவமாக விலகப் போகிறாராம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, கௌரவமாக அரசியலை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ராஜபக்ச குடும்பத்தினர் கோரியுள்ளதாக ‘சத்ஹண்ட’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் சட்டவிரோத சுவரொட்டிகளாம் – 1980களின் நிலை திரும்புவதாக எச்சரிக்கிறார் கோத்தா

வடக்கில் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இந்த நிலை நீடித்தால், அங்கு 1980களில் ஏற்பட்ட நிலை ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வெள்ளை வான் குறித்து கோத்தாவுடன் தொலைபேசியில் பேசிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்  கோத்தாபய ராஜபக்சவிடம், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விளக்கமளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துறைமுகநகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு, சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக, வெளியான தகவல்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

கோத்தா படுகொலை முயற்சி – குற்றத்தை ஒப்புக்கொண்ட மைத்திரிக்கு 6 மாத சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், சிங்களவர் ஒருவருக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அடிவாங்கிய கோத்தாவின் உயிரைக் காப்பாற்றிய மேர்வின் சில்வா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைத் தாமே ஒருமுறை காப்பாற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு கோத்தாவிடம் ஒப்படைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ச்சியில் கருணா – உறுதிமொழி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக விசனம்

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.