சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களின் குழு – 150 தொழிற்சாலைகளை அமைக்க திட்டம்
சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபத்தை ஈட்டாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை, தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
முதலீட்டுத் தேவைகளுக்காக அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் காணிகளை சீனாவுக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் மூலம் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால், ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா (147 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையிலுள்ள ஆழ்கடல் துறைமுகத்தை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு விற்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் எட்டப்பட்டுள்ள தீர்மானமானது இந்தியாவிற்கு அதிர்ச்சியை அளித்திருக்க மாட்டாது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின் சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில் பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.