மேலும்

தேசிய நல்லிணக்க முயற்சிக்கு பிரித்தானிய பிரதமரிடம் உதவி கோரவுள்ளார் மைத்திரி

போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு, பிரித்தானியாவில்  உள்ள செல்வாக்குப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஆதரவை திரட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும், பிரித்தானியாவின் உதவியைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்

புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

சிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன்

உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.

லண்டன் சென்ற மைத்திரிக்கு வரவேற்பு

லண்டனில் நாளை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரித்தானியா சென்றடைந்துள்ளார்.

பயணிகள் கப்பல் சேவைக்கு அவசரம் காட்டியது இந்தியா – ஆப்பு வைத்தது சிறிலங்கா

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ரணில், மங்களவை அவசரமாக சந்தித்த சீன தூதுவர் – உடன்பாடுகளை மதிக்குமாறு அறிவுறுத்தல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதையடுத்து, சீனத் தூதுவர் யி ஜியான்லியாங், அவசரமாக சிறிலங்கா பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் 2 பயணிகளே வருகை – மூடப்படுகிறது மகிந்தவின் மத்தல விமான நிலையம்

மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார் மைத்திரி

மூன்று நாள் பயணமாக நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, லண்டனில், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அபிலாசைகளை நிறைவேற்றும் உரிமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும் – சுஸ்மாவிடம் சம்பந்தன்

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்துவதாக அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.