மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

இந்துமாக் கடலில் இராணுவக் கட்டுப்பாட்டை விரிவாக்க முனையும் சீனா

அமெரிக்காவின் ‘பக்ஸ் அமெரிக்கானா’வை சீனா பிரதியெடுத்து செயற்படுத்தி வரும் நிலையில் வல்லுனர்கள் சீனாவின் இத்திட்டத்தை ‘பக்ஸ் சினிசியா’ என அழைக்கிறார்கள். இதனைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடல் சார் பாரம்பரிய வழக்காறுகளைக் கைவிட வேண்டும்.

காணாமற்போனோரைத் தேடும் முயற்சியில் ஒரு நம்பிக்கைக் கீற்று – அமந்த பெரேரா

தனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார்.

தமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை

‘தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.’இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், வாசனா சுரங்கிக விதானகே மற்றும் மாதவா கலன்சூரிய ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிலங்காவை காப்பாற்ற முனையும் அமெரிக்க அதிகாரிகள் – அம்பலப்படுத்துகிறார் பிரட் அடம்ஸ்

சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர்.  ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருக்கிறாரா சிறிசேன?

சிறிலங்கா இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் சிறிலங்கா அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும்.

போர்க்குற்றமிழைத்தவர்களை கதாநாயகர்களாக பாதுகாக்கக் கூடாது – ருக்கி பெர்னான்டோ

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது சிங்கள சமூகத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்துக்களையே முன்வைக்கிறது.

இந்தியச் சந்தையை முறியடிக்க சீனா கால்வைக்க வேண்டிய இடம் சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட துறைமுகத் திட்டத்தை மீளவும் புதுப்பிப்பதற்கு உதவி கோரியுள்ளதானது, இந்நாட்டின் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சீனா அதிகளவு செல்வாக்குச் செலுத்தியதற்கான ஒரு குறியீடாகக் காணப்படுகிறது.

போர்க்குற்ற விசாரணையை தட்டிக்கழித்து, உண்மை, நல்லிணக்கம் மீது கவனம் செலுத்தும் சிறிலங்கா

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொரு படிமுறையிலும் அவர்களுக்கு இதயசுத்தியுடன் ஆலோசனை வழங்கப்படுகிறதா என்பதை சிறிலங்கா அதிகாரிகளும் அனைத்துலக சமூகமும் உறுதி செய்யவேண்டும்.

காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள்

போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமற்போனோர் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக தற்போது பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் நகர்வு – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மனித உரிமைகள் பேரவைக்கு ஐ.தே.க விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபரும் அவரது அரசாங்கமும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரிக்கு ஆதரவான குழுவினர் கருதுகின்றனர்.