மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

அமெரிக்க சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் – அனைத்துலக ஊடகம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மாரின் ‘திறந்த ஜனநாயகம்’ தொடர்பில் ஏற்பட்ட கசப்பான பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா மீண்டும் நினைவுபடுத்தத் தவறியுள்ளது. அதாவது மியான்மாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா அசட்டை செய்துவருகிறது.

போர்க்குற்ற விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் – அனைத்துலக ஊடகம் எழுப்பும் கேள்விகள்

கலப்பு நீதிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இவ்வாறானதொரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்று huffington post ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் Taylor Dibbert.

கவலைக்குரிய விடயமாகியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு செலவின அதிகரிப்பு – அனைத்துலக ஊடகம்

சிறிலங்கா அரசாங்கமானது அடுத்த ஆண்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போர்க்குற்ற விசாரணை சிறிலங்கா இராணுவத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதா?

ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நீதிப் பொறிமுறையானது, நடுநிலைமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றைப் பின்பற்றும் தனிப்பட்ட நீதியாளர்களின் தலைமையில் சுயாதீன நீதி சார் மற்றும் விசாரணை சார் நிறுவகங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

மகிந்தவின் ஆணிவேரை அசைத்த சமந்தா பவர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.

ஐ.நா குழுவின் கண்டறிவுகள் – விசாரணைகளின் தொடக்கமாகுமா?

குறுகிய நாட்கள் மட்டுமே சிறிலங்காவில் தங்கியிருந்த போதிலும், நாட்டில் ஆரோக்கியமான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு உண்மை மற்றும் நீதி போன்றன மிகவும் இன்றியமையாதவை என்பதற்கான ஒரு சாட்சியமாகவே ஐ.நா பணிக்குழுவின் பயணம் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் சொல்லாட்சியை மாற்ற வேண்டிய தருணம் இது – அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முன்னுள்ள சவால்கள் தொடர்பாக பவர் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் தொடர்பாக பவர் தனது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

சமந்தா பவரும் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையும்

சிறிசேன அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் நல்லுறவைப் பேணவிரும்பினால், போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறுமாறும்,  குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்காவினால் அழுத்தம் கொடுக்க முடியாது போகலாம்.

காயம்பட்ட முல்லைத்தீவின் அழகு – இந்திய ஊடகவியலாளர்

போரின் போது இருந்த ஊரடங்குக் கலாசாரமானது தற்போதும் வடக்கில் தாக்கத்தைச் செலுத்துவதைக் காணலாம். அதாவது வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் சூரியன் மறையும் நேரத்தில் பூட்டப்படுவதானது ஊரடங்கின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

திலக் மாரப்பனவின் மறுபக்கம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச  43வது பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த போது, இந்த விடயத்தில்  பணிவாக நடந்து கொள்ளுமாறு ரணிலுக்கு ஆலோசனை வழங்கியது மாரப்பனவே ஆவார்.