மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

ட்ரம்பின் நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு தீங்கு விளைவிக்கும்

அமெரிக்க  அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் மற்ற நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற எடுத்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதும் சிங்கப்பூருக்கு பறந்தார் கோட்டா

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜிஜோ கோர் விரைவில் சிறிலங்கா பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதி மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவர் செர்ஜிஜோ கோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சுரேஷ் சாலே கைதும் ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டும்

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவரும், முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணியக தலைவருமான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 2026 பெப்ரவரி 25ஆம் நாள், புதன்கிழமை காலை 8.10 மணியளவில், பேலியகொடையில் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- ரில்வின் சில்வா

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல, அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதும் விளைவுகளும்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே,  கைது செய்யப்பட்ட சம்பவம், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, நீண்ட மற்றும் வேதனையான நீதிக்கான தேடலில் ஒரு அதிர்வு மாற்றத்தைக் குறிக்கிறது.

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை – ரில்வின் சில்வா

மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதது சாத்தியமற்றது என ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலே மீது பாய்ந்த பயங்கரவாத தடைச் சட்டம்- 3 நாள்கள் தடுப்புக்காவல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானப் பணி நிறுத்தப்படாது

யாழ்ப்பாணம் அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தின் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின்  (SIS) முன்னாள் தலைவரான  மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.