மேலும்

பிரிவு: செய்திகள்

கோத்தா, துமிந்த மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் 3 மணிநேரம் விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினால், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று 3 மணிநேரம் விசாரிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய சற்று முன்னர் இதனை சபையில் அறிவித்துள்ளார்.

சீனாவை சிறிலங்காவிடம் இருந்து ஓரம்கட்ட முடியுமா?

இந்தியா தனது நலன்களை பராமரித்துக் கொள்வதுடன் கொழும்புடன் தொடர்ந்தும் உறவைப் பேணுவதையும் இதன் மீது தான் செல்வாக்குச் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் அதேவேளையில், சீனாவிடமிருந்து சிறிலங்காவை ஓரங்கட்டுவதில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த ஒரே நாடு சிறிலங்கா – மேஜர் ஜெனரல் உதய பெரேரா

எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த அனுபவத்தைக் கொண்ட ஒரே நாடாக சிறிலங்கா விளங்குவதாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி- ஆதரவாகவும் எதிராகவும் வாதப்பிரதிவாதங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படக் கூடாது என்றும்  பரவலான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? – இன்று முடிவு அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிடவுள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மைத்திரி கொடுத்த விருந்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபருக்கும், புதிதாகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அதிபர் நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.

மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த எதிர்ப்பு- பாரஊர்திகளை மறித்து போராட்டம்

மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியருமான- மறைந்த கி.பி. அரவிந்தன் ( பிரான்சிஸ், சுந்தர்) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மோடியைச் சந்திக்க இந்தியா செல்கிறார் ரணில்

சிறிலங்காவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.