மேலும்

பிரிவு: கட்டுரைகள்

சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்கும் சமந்தா பவர் – அனைத்துலக ஊடகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில் தொடர்கிறது என்கின்ற செய்தி அமெரிக்காவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

மகிந்தவின் முகத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சீன அதிபரின் இந்தக் கூற்றானது மகிந்தவை இலக்காகக் கொண்டதா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனினும், சீனா இன்னமும் தனது கைக்குள் உள்ளது என சூளுரைத்த மகிந்தவின் கொட்டத்தை அடக்குவதற்காகவே சீன அதிபர் இவ்வாறானதொரு அறிவித்தலை விடுத்ததாக சிலர் கூறுகின்றனர்.

சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்த வைகோ

சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ‘எனக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்ட திமுக சதி’ என்ற காரணத்தைச் சொல்லி தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிய வைகோ, எளிதில் உணர்ச்சி வசப்படும் குணத்தால் இதற்கு முன்பும் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை – அனைத்துலக ஊடகம்

உண்மையில், மைத்திரிபால சிறிசேன தான் சார்ந்த சிங்கள சமூகத்தால் ‘துரோகி’ என்கின்ற முத்திரையைக் குத்த விரும்பவில்லை. இது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் பொருத்தமானதாகும்.

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

கடந்த கட்டுரையில் பாகிஸ்தான் தனது தேசகட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் அதேவேளை மேலை நாடுகளையும் சீன வல்லரசையும் எவ்வாறு தனக்கே உரித்தான பாணியில் சமாளித்து செல்ல முற்படுகிறது என்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.

இந்தியாவைச் சமாளித்த ஜே.ஆர், சீனாவைச் சமாளிக்கும் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே.

இந்திய சார்பு ரணில் அரசுடன் சீனா எப்படி நெருங்கியது? – இந்திய ஊடகம்

சிறிலங்கா பிரதமரின் சீனாவிற்கான பயணத்தின் இறுதியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைக்கு மீளத் திரும்பிவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்து வீடுகள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல – மொறட்டுவ பல்கலைக்கழக வல்லுனர்கள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ரணில் அரசாங்கத்தையும் கவிழ்க்குமா இந்தியா?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த சமிக்கையானது  மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதைக் குறித்து நிற்கிறது.