சிறிலங்காவுக்கு சோதனை – நியூயோர்க் ரைம்ஸ்
கடந்த சனிக்கிழமை சிறிலங்கா பூராவும் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது வீதி விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற சிறிய விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை சிறிலங்கா பூராவும் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது வீதி விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற சிறிய விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது.
பெப்ரவரி 4 அன்று சிறிலங்கா தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. பெப்ரவரி 01 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ‘அமெரிக்க-சிறிலங்கா உறவு கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரப்படுவதாகவும் இனி வருங்காலங்களில் இரு நாடுகளின் உறவையும் மேலும் மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் திருகோணமலையின் மேற்குப் பக்கத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட எண்ணெய் கொள்கலன் தாங்கிப் பண்ணை (oil tank farm ) ஒன்று காட்டில் மறைந்து காணப்படுகிறது.
இலங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.
‘ஆசிய விவகாரங்களைக் கையாள்வதும், ஆசிய விவகாரங்களைத் தீர்ப்பதும் அதன் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் ஆசிய மக்களாவர்’ என 2014ல் இடம்பெற்ற ஆசியாவில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை கட்டுமான அளவீடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து வெளியிட்டிருந்தார்.
இலங்கைத் தமிழர்களின் நடப்பு அரசியல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான மோதலாகவே உருமாறி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து, ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வகிபாகம் ஓய்வு நிலைக்கு வந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் சக்தியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு சில வருட காலம் நீடித்தது.
ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் விஜய் கோகலேயை இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலம் ஜனவரி 28ல் முடிவுறவுள்ள நிலையிலேயே இந்திய அரசாங்கம் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோக்கலேயை நியமிப்பது தொடர்பாக அறிவித்துள்ளது.
ஞாநி நாடறிந்த மூத்த பத்திரிகையாளர். எதையும் எவர் முன்னும் நேர்படப்பேசும் மனத் திண்மை பெற்ற மனிதராக இதழியல் துறையில் இயங்கி வருபவர். அவரது ஓ பக்கங்களுக்கென்று தனித்த வாசகர் வட்டம் உண்டு. அப்பக்கங்களின் வெக்கை தாளாமல் சில இதழ்கள் வெளியிட மறுத்த வரலாறும் உண்டு. தீம்தரிகிட, தினமணி கதிர் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் பணியாற்றியவர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஞாநி எனக்கு அறிமுகமாகினார். ஜானகி மகளிர் கல்லூரியில் அவர் அரங்கேற்றிய பலூன் நாடகத்தை காண்கையில்தான் ஞாநியின் அறிமுகம் கிடைத்தது. நான் இடதுசாரி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஆனந்த விகடன் இதழில், நக்சல் அமைப்பு குறித்து, ஞாநி எழுதிய தவிப்பு என்ற புதினம் தொடராக வந்தது.