மேலும்

பிரிவு: கட்டுரைகள்

கடன்பொறிகள் நிறைந்த சீனாவின் பட்டுப்பாதை

சீனாவின் பட்டுப்பாதைகள் மற்றும் கரையோரப் பட்டுப் பாதைகள் போன்றன இதன் வர்த்தகப் பாதைகள் அமைந்துள்ள மத்திய ஆசியா மற்றும் இந்திய மாக்கடலிற்குக் குறுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டு என்பது சீனாவின் வர்த்தகச் செயற்பாட்டில் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ள போதிலும் இது சீனாவின் அடிப்படை வர்த்தகச் செயற்பாடாகக் காணப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம்

கடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது.

பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்?

நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதென்பது  சாத்தியமற்றது.

அகங்காரவாதமும், அபிலாசைகளும்

அரசியல் அபிவிருத்தி  என்பது  ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ?  அல்லது  கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள  கேள்வியாக உள்ளது.

ஊடகங்களைப் பழிசொல்வது நியாயமா?

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில் யுனெஸ்கோ நிறுவனத்தால் கடந்த வாரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர்களுடன் சில ஊடக நிறுவனங்களும் மூத்த ஊடகவியலாளர்களும் இணைந்து இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?- சரத் வீரசேகரவுக்கு விக்கி பதிலடி

அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா

சிறிலங்கா உட்பட பத்து கரையோர நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக நவம்பர் 1 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அறிவித்திருந்தார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

பிறநாடுகளின் உள் விவகாரங்களில் அதிகரிக்கும் சீனாவின் தலையீடுகள்

அமெரிக்க முறைமையிலான தலையீட்டை சீனா பாரம்பரியமாக மறுத்து வந்துள்ள போதிலும் மியான்மார், சிம்பாப்வே போன்ற நாடுகளில் சீனா தனது ஆழமான பொருளாதாரத் தலையீட்டைக் காண்பிப்பதானது சீனாவை மேலும் உறுதியான பூகோளப் பங்களிப்பை நோக்கி இழுத்துச் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா?

சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது.

மறக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்

அண்மைய மாதங்களில் ஊடகங்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்யா அகதிகள் தொடர்பான செய்திகள் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக ஊடகங்கள் முக்கியத்துவம் காண்பிக்கவில்லை.