மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்கா- சீன உறவை, மீண்டும் மேலுயர்த்த வேண்டும் – சீன அதிபர் வலியுறுத்தல்

முக்கியமான நோக்கத்தை நிறைவேற்ற சிறிலங்கா- சீன உறவை, மீண்டும், ஊக்குவித்து மேலுயர்த்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீன அதிபர் ஜி ஜின்பின் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு கிடைக்குமா எதிர்க்கட்சித் தலைவர் பதவி? – சபாநாயகருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக, சபாநாயகர் சமல் ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன – சிறிலங்கா அதிபர்கள் பேச்சில் துறைமுக நகர விவகாரத்துக்கு முக்கிய இடம்

சிறிலங்கா அதிபருக்கும், சீன அதிபருக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் நிகழ்வில் வெறுமையாக கிடந்த வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான ஆசனங்கள்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்ட அரசாங்க நிகழ்வில், கொழும்பில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் பங்கேற்கவில்லை.

பீல்ட் மார்ஷல் பதவிநிலை சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்தைச் சூனியமாக்குமா?

பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அரசியலில் தொடர்ந்து ஈடுபடும் வாய்ப்பை இழப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய ஏப்ரல் 23இல் சிறிலங்காவில் இருக்கமாட்டார் மைத்திரி

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவுறும் நாளான வரும் ஏப்ரல் 23ம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் இருக்கமாட்டார் என்றும், அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனின் பற்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈர வலயக் காடுகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா  பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது

சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள,  சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு

சீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம்  விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.