மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்

புலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள் சாதகமான வகையில் அமைந்திருப்பதாகவும், சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நேபாளத்தைத் தாக்கியது பாரிய நிலநடுக்கம் – சிறிலங்கா தூதரகமும் சேதம்

நேபாளத்தை இன்று நண்பகல் மீண்டும் தாக்கிய பாரிய நிலநடுக்கத்தினால் காத்மண்டுவில் உள்ள சிறிலங்கா தூதரகமும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவரும் இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு பரிந்துரை

சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலையில் உள்ள பதவியான- இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு, ஆறு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலம் பெற்றுள்ள சிறிலங்கா ஆதரவு அணி – தமிழருக்குப் பின்னடைவு

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் பணயம் வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 பேர் மீட்பு

மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் வீடு ஒன்றில் பயணக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக, மெக்சிகோ காவல்துறை தெரிவித்துள்ளது.

அச்சுறுத்திய மகிந்தவை வெளியே போகச்சொன்ன மைத்திரி – அம்பலமாகும் சந்திப்பு இரகசியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இனிமேல் சந்திப்பு இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தரப்பைச் சேர்ந்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

மகிந்தவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கேணல் மகேந்திர பெர்னான்டோவிடம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான, கேணல் மகேந்திர பெர்னான்டோ, சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவினால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு பொறுத்திருங்கள் – சிறிலங்கா அமைச்சர்களுக்கு ஜோன் கெரி ஆலோசனை

ஈரானுடனான அமெரிக்காவின் உறவுகள் விரைவில் சுமுகமடையும் என்றும் இன்னும் சில வாரங்களுக்கு சிறிலங்காவைப் பொறுத்திருக்குமாறும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சீன நீர்மூழ்கிகள் – பதிலளிக்க மறுத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர்

கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிகள் தரித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர், ஜெப் ரத்கே, கருத்து எதையும் வெளியிட மறுத்துள்ளார்.