மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஜோன் கெரியுடன் சிறிலங்காவுக்கு படையெடுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரிகள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளனர். 

நாளை காலை சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜோன் கெரி

இரண்டு நாள் பயணமாக இன்று காலை 7.45 மணியளவிவில் சிறிலங்காவை வந்தடையவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நாளை அதிகாலை கொழும்பு வருகிறார் ஜோன் கெரி – கூட்டமைப்பையும் சந்திப்பார்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலையில் கொழும்பை வந்தடைவார் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் சிறிலங்கா அதிபருக்கு கையளிப்பு

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், போர் தவிர்ப்பு வலயம், ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கப் பிரதியொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆவணப்படத்தை தயாரித்த கலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை வரவேற்கிறது அமெரிக்கா

சிறிலங்காவில் அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக 200 படை அதிகாரிகள், 40 மோப்ப நாய்கள் சிறிலங்கா வருகை

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 200 பேர், 40 மோப்ப நாய்கள் சகிதம், சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா விசாரணை அறிக்கையில் ஆச்சரியங்கள் இருக்கும்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா

அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழரான மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு, இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போர்க்குற்ற, மனித உரிமை மீறல் கரிசனைகளை சிறிலங்காவிடம் வெளிப்படுத்துவார் ஜோன் கெரி

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்காவின் நீண்டகால கரிசனைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்காவிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்துவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் பழுதடைந்திருந்த சிறிலங்காவின் இராட்சத விமானம் – கொழும்பு நோக்கிப் புறப்பட்டது

நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களையும், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான படையினர் மற்றும் மருத்துவர்களையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படை விமானம், திருத்தப்பட்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.